சரியாக பரீட்சை எழுதவில்லை... பிளஸ்-1 மாணவி எடுத்து விபரீதம் முடிவு.! அதிர்ச்சியில் பெற்றோர்.! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்வு சரியாக எழுதவில்லை என்று 11ஆம் வகுப்பு மாணவி வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பனங்குளம் பகுதியை சேர்ந்தவர் ஆடிட்டர் செல்வகுமார். இவரது மகள் தரண்யா(17) 11ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்பொழுது நடைபெற்று வரும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், தரண்யா இயற்பியல் தேர்வை சரியாக எழுதவில்லை என்று பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து தரண்யாவுக்கு பெற்றோர் ஆறுதல் கூறியுள்ளனர்.

இருப்பினும் மனவேதனையில் இருந்த தரண்யா நேற்று வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து, குடும்பத்தினர் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது, தரண்யா ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இந்நிலையில் பெற்றோர் தரண்யாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் தரண்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11th class girl commits suicide in Pudukkottai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->