ஈரோடு அருகே பரிதாபம்.! வாய்க்காலில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் வாய்க்காலில் மூழ்கி பத்தாம் வகுப்பு மாணவர்கள் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பகுதியை சேர்ந்தவர் பீட்டர் கனகராஜ். இவரது மகன் காட்சன் பிரின்ஸ் (15), அதே பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் தற்பொழுது பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வருவதால், நேற்று பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடைபெற்றனர். இந்த சிறப்பு வகுப்பிற்குச் சென்ற காட்சன் பிரின்ஸ் மற்றும் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் ஹரிகிருஷ்ணன் (15) ஆகிய இரண்டு பேரும் வகுப்பு முடிந்து வீட்டிற்கு வரும்பொழுது, நண்பர்கள் சிலருடன் கீழ்பவானி பாசன வாய்க்காலில் குளித்துள்ளனர்.

அப்பொழுது காட்சன் பிரின்ஸ் மற்றும் அரிகிருஷ்ணன் ஆகிய இரண்டு பேரும் வாய்க்காலின் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மற்ற நண்பர்கள் கூச்சல் போடவே அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்து நீரில் மூழ்கிய இரண்டு பேரில் உடல்களை மீட்டனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த இரண்டு மாணவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10th class 2 students drowned in the drain in erode


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->