#WIPL : மகளிர் ஐபிஎல் ஏலம்.. இளம் வீராங்கனைகளை வாங்கிய டெல்லி அணி.! - Seithipunal
Seithipunal


மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில் டெல்லி அணி இளம் வீராங்கனைகளை வாங்கியுள்ளது.

முதலாவது மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 3ம் தேதி முதல் 26ம் தேதி வரை இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மகளிர் ஐபிஎல் சீசனில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்கின்றன. மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், அகமதாபாத், லக்னோ அணி ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன.

அதன்படி, 5 அணிகளும் 4669.99 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டன. இதனையடுத்து மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வீராங்கனைகளுக்கான ஏலம் தற்போது மும்பையில்  நடைபெற்று வருகிறது.

இதில், ஒவ்வொரு அணிக்கும் ஏலம் எடுக்க அதிகபட்ச தொகையாக ரூ.12 கோடி நிர்ணயித்துள்ளது. மேலும், ஒவ்வொரு அணியும் குறைந்தது 15 வீராங்கனைகளையும், அதிகபட்சமாக 20 வீராங்கனைகளையும் ஏலம் எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி இந்திய இளம் வீராங்கனைகளை வாங்கியுள்ளது. அதன்படி, ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷபாலி வர்மா மற்றும் இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனான ஜெமிமா ரோட்ரிக்ஸை டெல்லி கேப்பிடல்ஸ் வாங்கியுள்ளது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீராங்கனைகள்

ஷபாலி வர்மா (இந்தியா) - 2 கோடி - பேட்ஸ்மேன்

ஜெமிமா ரோட்ரிக்ஸ் (இந்தியா) - 2.2 - கோடி - பேட்ஸ்மேன்

மேக் லேனிங் (ஆஸ்திரேலியா) - 1.10 கோடி


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

WPL Auction Delhi Capitals buy shafali Varma


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->