ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி.. இந்திய அணி அபார பந்துவீச்சு.. இந்திய அணிக்கு 66 ரன்கள் இலக்கு.! - Seithipunal
Seithipunal


இந்தியா - இலங்கை அணிகள் மோதும் ஆசியக் கோப்பை மகளிர் கிரிக்கெட் இறுதி போட்டியில் இலங்கை அணி 66 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடைப்பெற்று வருகிறது. ஐக்கிய அமீரகம், மலேசியா, தாய்லாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, வங்கதேசம் ஆகிய 7 அணிகள் இத்தொடரில் பங்கேற்றன.

ஆசியக் கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று போட்டிகளின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் தாய்லாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் தாய்லாந்தை வீழ்த்தி இந்திய அணியும், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீழ்த்தி இலங்கை அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன

இதனையடுத்து இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன ஆசியக் கோப்பை இறுதிப்போட்டி  இன்று மதியம் 1 மணிக்கு நடைபெற்று வருகிறது. இதில், இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி இந்திய அணியின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளையும் இழந்து 65 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.

இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய ரேனுகா சிங் 3 விக்கெட்டுகளும், சினே ரானா மற்றும் ராஜேஸ்வரி கயக்வாட் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். அதனைத் தொடர்ந்து 66 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது. 

இதுவரை 7 மகளிர் ஆசியக் கோப்பை தொடர் நடைபெற்றுள்ளது. இதில் 7 முறையும் இந்திய மகளிர் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்று 6 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஒரு ஒரு முறை இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணியிடம் தோற்று 2வது இடத்தை பிடித்துள்ளது. தற்போது 7வது முறையாக சாம்பியன் பட்டம் முனைப்பில் இந்திய அணி விளையாட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Womens Asia Cup final srilanka target 66 against India


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->