உலக கோப்பை தொடரில், இவர் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளேன்.! முக்கிய வீரரை பற்றி கூறிய கோலி.!!
virat kohli says about kl rahul
உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் இன்று தொடங்குகிறது. முதல் போட்டி இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகிறது. இதைத் தொடர்ந்து ஜூன் 5ஆம் தேதி நடைபெறும் போட்டியில் இந்திய அணியும், தென் ஆப்பிரிக்க அணி மோதுகிறது.
தென் ஆப்பிரிக்கவுக்கு எதிராக ஜூன் 5ஆம் தேதி நடைபெறும் போட்டிக்கு முன்பே கே.எல்.ராகுலின் ஃபார்ம், ஒரு பெரிய நம்பிக்கை தரும் அம்சம் என்று விராட் கோலி கூறியுள்ளார்.
நான்காம் நிலை வீரருக்கு விஜய்சங்கரை முதலில் யோசித்தனர். ஆனால் அவர் உடல் தகுதி மற்றும் ஃபார்ம் இரண்டுமே நம்பத்தகுந்ததாக இல்லாததால் கே.எல்.ராகுல்தான் சிறந்தவர் என்ற முடிவுக்கு அணி நிர்வாகம் வந்துள்ளது
கே.எல்.ராகுல் ஓகே இந்த புதிய பொறுப்பை நான் ஏற்று கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதுகுறித்து விராட் கோலி கூறும்போது, இந்த பயிற்சி ஆட்டத்தில் மிகப்பெரிய நம்பிக்கை கே.எல்.ராகுல் அடித்த சதம்தான். மற்ற வீரர்களுக்கு அவர்களது ரோல் என்னவென்று தெரியும்.
ஆகவே கே.எல்.ராகுல் ரன் எடுப்பது முக்கியம் என்று கருதினோம். அவர் உறுதியான வீரர் அவரால் ரன் விகிதத்தை இழக்காமல் கொண்டு செல்ல முடியும், அதனால் தான் திறமைக்கு எடுத்துக்காட்டு அவர் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
English Summary
virat kohli says about kl rahul