ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனைப் படைத்த விராட் கோலி.! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஒரே அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடி விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 49-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியிடம் தோல்வியை சந்தித்தது.

இதன் மூலம் சென்னை அணி தனது பிளே ஆப் செல்லும் வாய்ப்பை இழந்தது. மேலும் இந்த வெற்றியின் மூலம் பெங்களூர் அணி புள்ளி பட்டியலில் 12 புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்த நிலையில் நேற்றைய போட்டியில் விராட் கோலி விளையாடியதன் மூலம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது, ஐபிஎல்-லில் ஒரே அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதுவரை, அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக 218 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இதற்கடுத்து சென்னை அணியின் தோனி 200 போட்டிகளிலும், மும்பை அணியின் பொல்லார்ட் 187 போட்டிகளிலும், ரோகித் சர்மா 177 போட்டிகளிலும், ரெய்னா 176 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virat Kohli play more games same team


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->