தொடங்கியது தமிழ்நாடு கிரிக்கெட் தொடர்.! உற்சாகத்தில் ரசிகர்கள்.!!
tomorrow start tnpl cricket
தமிழகத்தில் 4-வது டி.என்.பி.எல். டி 20 போட்டி நாளை (19-ந்தேதி) தொடங்க உள்ளது. ஆகஸ்ட் 15-ந்தேதி வரை இந்தப்போட்டி நடக்க உள்ளது. டி.என்.பி.எல். போட்டியில் டூட்டி பேட்ரியாட்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. 2017-ம் ஆண்டு நடந்த 2-வது டி.என்.பி.எல். போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. கடந்த முறை மதுரை பாந்தர்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
போட்டியின் தொடக்க ஆட்டம் திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நாளை இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் விளையாட உள்ளன. இரு அணிகளும் வெற்றி முனைப்புடன் போட்டியை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளன. இதனால் முதல் ஆட்டமே பரபரப்பு நிறைந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கவுசிக் காந்தியின் வரவு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும்.
கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.1 கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.60 லட்சமும் வழங்கப்படும்.
English Summary
tomorrow start tnpl cricket