#INDvsSA || இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.!! - Seithipunal
Seithipunal


தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. முதல் ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 1:30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 27.3 ஓவரில் வெறும் 116 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் அக்ஷரதீப் சிங் 5 விக்கெட்களையும், ஆவேஷ் கான் 4 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதனை அடுத்து 117 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ருத்ராஜ் 5 ரன்கள் ஆட்டம் இழந்து வெளியேறினார். தனது முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கிய தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் 43 பந்துகளை எதிர்கொண்டு 55 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவருடன் 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து ஸ்ரேயஸ்  ஐயர் 45 பந்துகளை எதிர்கொண்டு 52 ரன்கள் குவித்தார். இறுதியில் இந்திய அணி 16.4 ஓவரில் வெற்றி இலக்கான 117 எளிதாக எட்டி அபார வெற்றி பெற்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Team India won 1st odi against SA


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->