நாளை தொடங்கும் ஒருநாள் தொடர்.! இந்திய அணியின் முக்கிய ஆட்டக்காரருக்கு இதுதான் கடைசி தொடர்?!
TEAM INDIA IND VS SA ONE DAY
இந்திய கிரிக்கெட் அணியில் இளம் வீரர்களின் வரவால், மூத்த வீரர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர்களுக்கு பெரும் சிக்கல் வந்துள்ளது.
ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் ஆட்டங்கள் மூலம், இந்திய அணிக்கு புதிய, புதிய இளம் வீரர்கள் கிடைத்து வருகின்றனர். கடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் விளையாடிய ருதுராஜ் அதற்கு ஒரு நல்ல சான்று என்று சொல்லலாம்.
மேலும், இஷான் கிஷன் உள்ளிட்ட பல தொடக்க ஆட்டக்காரர்கள் இந்திய அணிக்கு கிடைத்துள்ளனர். இதனால், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இருக்கக்கூடிய ரோஹித் சர்மா, கே எல் ராகுல், ஷிகர் தவான் உள்ளிட்ட வீரர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் தான், நாளை இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் தொடங்க உள்ளது. இந்த தொடரில் அணியின் மூத்த தொடக்க ஆட்டக்காரர்கள் சரியாக விளையாடவில்லை என்றால், அவர்களுக்கு இந்த தொடர் தான் கடைசியாக இருக்கும் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் சொல்கின்றன.
குறிப்பாக ஷிகர் தவான் இந்த தொடரில் சரியாக தனது ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை என்றால், இதற்கு பிறகு அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படுவது மிகக் கடினம் என்று சொல்லப்படுகிறது.
எனவே, நாளை தொடங்கவுள்ள ஒரு நாள் தொடரில் ஷிகர் தவான் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளார்.
English Summary
TEAM INDIA IND VS SA ONE DAY