விளையாட்டுத்துறையின் மிக உயரிய விருதை பெரும் ஹிட்மேன்.! ரசிகர்கள் உற்சாகம்.!  - Seithipunal
Seithipunal


மிக உயரிய விருதாக விளையாட்டுத்துறையில் கருதப்படும் கேல் ரத்னா விருதை விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் பல துறையைச் சேர்ந்தவர்களுக்கும் வருடந்தோறும் வழங்கப்படும். 

இந்த விருதை பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மாவுக்கும் டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிக்கா பத்ரா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் ஆகியோருக்கு கொடுக்க பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில் கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகள் யாருக்கு வழங்கப்பட இருக்கிறது என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. மாரியப்பன் மற்றும் மணிக்கா பத்ரா மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் ஆகியோருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதுபோல இந்திய கிரிக்கெட் வீரரான ரோகித் சர்மாவுக்கும், ஹாக்கி வீராங்கனை ராணிக்கும் இந்த விருது அளிக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு துறையை சேர்ந்த பல்வேறு பிரிவுகளில் 27 பேருக்கு அர்ஜூனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 29ஆம் தேதி காணொளி வாயிலாக வீரர் மற்றும் வீராங்கனைகள் ஜனாதிபதி விருது வழங்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rohit sharma will get khel ratna


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->