அணியில் இருந்து விலகிய ரோகித் சர்மா..காரணம் என்ன?
Rohit Sharma left the team..What is the reason?
17-வது ஐபில் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் அதிகமாக பேசப்படுவது மும்பை இந்தியன்ஸ்சும் ரோஹித் சர்மாவும்தான். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவை நீக்கி பாண்ட்யாவை நியமித்தது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது.
மும்பை இந்தியன்ஸ் விளையாடும் மைதானங்களில் பாண்ட்யாவுக்கு எதிராகவும் ரோகித் சர்மாவுக்கு ஆதரவாகவும் ரசிகர்கள் கோஷமிட்டு வந்தனர். பாண்ட்யா தலைமையிலான மும்பை அணி விளையாடிய 3 போட்டிலும் தோல்வி அடைந்துள்ளது.இதற்க்கு,பண்டியாவின் கேப்டன்ஷிப்தான் காரணம் என சமூகவலைதளைங்களில் பலரும் கருது தெரிவித்துவந்தனர்.
அதுமட்டும்மல்லாமல்,முதல் போட்டியில் பாண்டியா ரோஹித் சர்மாவை பீல்டிங் நிற்கவைக்கும் காட்சிகள் சமூகவலைதளைங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அதனால் ,ரோஹித் பேன்ஸ் பாண்டியா மீது கடும்கோபமாகி , போட்டியின் நடுவே நாய் ஒன்று மைதானத்துக்குள் வந்தபோது , போட்டியை காணவந்த ரசிகர்கள் நாய் பார்த்து "பாண்டியா பாண்டியா " என் கத்தினர்.
இந்நிலையில் ,இந்த சீசனுடன் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ரோகித் சர்மா விலகவுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாண்ட்யாவின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் போட்டியில் ஹர்திக் மற்றும் ரோகித் சர்மாவின் முடிவில் முரன்பாடு ஏற்படுவது அணிக்கு பிரச்சனையாக அமைகிறது . இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ரோகித் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Rohit Sharma left the team..What is the reason?