ரிஷப் பந்தை மிஸ் பண்ணும் "டெல்லி அணி" வீரர்கள்.. டக்அவுட்டில் வைக்கப்பட்ட ஜெர்சி..!! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் வீரரும் டெல்லி அணியின் கேப்டனுமான ரிஷப் பந்த் புத்தாண்டை குடும்பத்துடன் கொண்டாடுவதற்காக சென்ற பொழுது கார் விபத்தில் சிக்கிய நிலையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு தற்பொழுது ஓய்வெடுத்து வருகிறார். அதன் காரணமாக அவர் நடப்பாண்டு நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகி உள்ளார்.

இதன் காரணமாக டெல்லி அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். மேலும் டெல்லி அணியின் விக்கெட் கீப்பராக சப்ராஸ் கான் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 2023 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் லக்னோ சூப்பர் கெய்ன்ட்ஸ் அணியுடன் இன்று விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியானது தற்பொழுது நடைபெற்று வரும் நிலையில் டெல்லி அணி வீரர்கள் அமரும் டக்அவுட்டில் ரிஷப் பந்தின் ஜெர்சி வைக்கப்பட்டுள்ளது. 

ரிஷப் பந்த் விபத்து காரணமாக தொடரில் டெல்லி அணிக்காக விளையாடாத சூழ்நிலையில் அவருடைய ஜெர்சி டக்அவுண்டில் வைத்திருப்பது டெல்லி அணி ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. டெல்லி அணியினர் ரிஷப் பந்த் மீது வைத்துள்ள அன்பை வெளிப்படுத்தும் வகையில் இது அமைந்துள்ளதாக கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rishabh Pant jersey in Delhi team dugout


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->