உயர் சிகிச்சைக்காக மும்பைக்கு மாற்றப்படும் ரிஷப் பந்த்.!
Rishabh pant changed hospital in Mumbai
பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பந்த் தனது குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாட சென்ற போது விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் ஏற்கனவே தகவல் கொடுத்திருந்தது. இந்த நிலையில், உத்தரகாண்ட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ரிஷப் பண்ட் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்கு நெற்றிப்பகுதியில் ஏற்பட்ட காயத்துக்காக ‘பிளாஸ்டிக் சா்ஜரி’ செய்யப்பட்டுள்ளது.
மேலும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ரிஷப் பந்த் தற்போது தனி அறைக்கு மாற்றப்பட்டு குணமடைந்து வருகிறார்.
இந்த நிலையில் காலில் ஏற்பட்ட காயத்துக்கு மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார். இதனை டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் இயக்குநர் ஷ்யாம் சர்மா தெரிவித்துள்ளார்.
அதன்படி, இன்று மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ரிஷப் பந்த் மாற்றப்படுகிறார். அங்கு அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
English Summary
Rishabh pant changed hospital in Mumbai