ரிஷப் பண்ட் இடமாற்றம்.? என்ன ஆச்சு.. கிரிக்கெட் வீரருக்கு.?!
Rishabh pant changed hospital
பிரபல கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் தனது குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாட சென்ற போது விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர், கொடுமையான விபத்தில் பாதிக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிகுந்தவாறு வழியில் கதறி துடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பலரையும் அது வேதனைப்படுத்தியது.
அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் ஏற்கனவே தகவல் கொடுத்திருந்தது. இந்த நிலையில், அவர் அடுத்த 24 மணி நேரத்திற்குள் மும்பை அல்லது டெல்லியில் இருக்கும் மருத்துவமனைக்கு மாற்றப்படலாம் என்று ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
உத்தரகாண்ட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ரிஷப் பண்ட் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் விமானம் மூலம் அடுத்த கட்ட சிகிச்சைக்காக மும்பை அல்லது டெல்லிக்கு செல்வார் என்று கூறப்படுகிறது.
English Summary
Rishabh pant changed hospital