ரிஷப் பந்த் விபத்துக்கான காரணம் என்ன? வெளியான பரபரப்பு தகவல்.!
Rishabh pant car accident reason
பிரபல கிரிக்கெட் வீரரான ரிஷப் பந்த் தனது குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாட சென்ற போது விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர், கொடுமையான விபத்தில் பாதிக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிகுந்தவாறு வழியில் கதறி துடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பலரையும் அது வேதனைப்படுத்தியது.
அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் ஏற்கனவே தகவல் கொடுத்திருந்தது. இந்த நிலையில், உத்தரகாண்ட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ரிஷப் பண்ட் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் விமானம் தனி விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு செல்லப்படுகிறார்.
இந்த நிலையில் ரிஷப் பந்த்தை மருத்துவமனையில் நேரில் சந்தித்த பிறகு டெல்லி கிரிக்கெட் அசோசியேஷன் இயக்குனர் ஷியாம் சர்மா பேசியதாவது, ரிஷப் பந்த் குணமாகி வருவதாகவும் பிசிசிஐ அவரை வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை பெற வைக்க ஏற்பாடு செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், சாலையில் இருந்த பள்ளத்தில் விடாமல் காரை திருப்ப முற்பட்ட போதுதான் விபத்து ஏற்பட்டது என ரிஷப் பண்ட் கூறியதாக ஷியாம் சர்மா தெரிவித்துள்ளார்.
English Summary
Rishabh pant car accident reason