பெரம்பலூர்: மாவட்டத்திற்கு பெருமை தேடித்தந்த இரட்டையர்கள்.! டென்னிஸில் சாதனை.!  - Seithipunal
Seithipunal


கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புதுச்சேரி மற்றும் தமிழக அளவிலான மருத்துவ கல்லூரிகளுக்கு இடையில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுக்கான டென்னிஸ் போட்டி நடைபெற்றது. 

இந்த போட்டியில் பெரம்பலூர் நகரம் ராஜா நகரை சேர்ந்த பிரபா- செல்லப்பிள்ளை தம்பதிகளின் இரட்டை பிள்ளைகளான விஜய் மற்றும் சூர்யா வெற்றி பெற்றுள்ளனர். விஜய், சூர்யா இருவரும் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் அமைந்துள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகின்றனர்.

டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் ஆட்டத்தில் சூர்யா இரண்டாவது இடமும், விஜய் முதலிடமும் இரட்டையர் பிரிவில் இவர்கள் இரண்டு பேரும் வெற்றி பெற்றுள்ளனர். முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர்களான இவர்கள் மாவட்டத்திற்கு பெருமை தேடி கொடுத்துள்ளனர். அவர்களுக்கு தற்போது பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. 

டென்னிஸ் போட்டியில் தொடர்ந்து தேசிய மற்றும் மாநில அளவில் வெற்றிகளை குவித்து வரும் இரட்டையர்களான சூர்யா மற்றும் விஜய்க்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இவர்கள் இருவரும் 2024 இல் பிரான்சில் நடிக்க உள்ள ஒலிம்பிக்கில் பங்கேற்க பயிற்சி எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Perambalur twin brothers achieved in tennis


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->