கைகள் வலுப்பெற.. எச்சரிக்கை திறன் மேம்பட.. பம்பர விளையாட்டு...!!
pampara vilaiyattu
என்னதான் மொபைல் போன் மற்றும் கணினியில் விளையாடினாலும் கிராமங்களில் விளையாடுகின்ற விளையாட்டுகளுக்கு அவை இணையாவதில்லை.
தொழில்நுட்பம் நம்மை வசப்படுத்தும் முன்பு நாம் விளையாடிய விளையாட்டுகள் இன்று கனவாகிவிட்டது. வீட்டுத் திண்ணையில் அமர்ந்து விளையாடிய விளையாட்டுகளும், மரத்தின் நிழலில் விளையாடிய விளையாட்டுகளும் இன்று நம் கைக்குள் அடங்கிவிட்டது என்பதுதான் உண்மை.
இன்றைய காலக்கட்டத்தில் பம்பரம் விளையாடுபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது.
பம்பரம் ஒரு சமானப்புள்ளியில் நிலைத்து, அதனைச்சுற்றிய அச்சில் சுழலும் ஒரு விளையாட்டு ஆகும்.
எத்தனை பேர் விளையாடலாம்?
பல பேர்.
விளையாட தேவையானது :
பம்பரம்
ஒரு மீட்டர் நீளமுள்ள சாட்டை (கயிறு).
பயன்கள் :
கைகள் வலுபெறும்.
எச்சரிக்கை திறன் மேம்படும்.