முதல் முறையாக ஐபிஎல் அணியில் இணைந்த முதல் பெண்! எந்த அணி தெரியுமா?
navnita join ipl team
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் டி20 கிரிக்கெட் லீக் தொடரான ஐபிஎல் தொடர் ஆண்டு தோறும் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
ஐபிஎல் தொடர்களில் அதிகமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட அணிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ஒன்று. அந்த அணி பல ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக விளையாடியும், சிறந்த வீரர்களை கொண்டிருந்த போதும் இதுவரை கோப்பையை வெல்ல முடியவில்லை.
இந்நிலையில் ஐபிஎல்லில் வேறு எந்தவொரு அணியும் செய்யாத ஒரு விஷயத்தை பெங்களூர் அணி செய்துள்ளது. அணி புதிதாக நவ்நீதா கௌதம் என்ற பெண்ணை தங்கள் அணியின் ஆதரவு ஊழியர்களில் ஒருவராக இணைத்துள்ளது.
இதன் மூலம் ஐபிஎல் அணிகளில் பெண் ஒருவரை ஆதரவு ஊழியராக நியமித்த முதல் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தான். இந்த நவ்நீதா கௌதம் பெங்களூர் அணியின் விளையாட்டு மசாஜ் சிகிச்சையாளராக பணியாற்றவுள்ளார் என்பது கூடுதல் தகவல்.