நேற்றைய போட்டியில் புதிய சாதனை படைத்த எம்.எஸ். தோனி.!
ms dhoni completes 100 catches
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. அதில் சென்னை அணி 4 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று இருந்தது. இதனால் நேற்று நடைபெற்ற போட்டியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், சென்னை அணி அசத்தலாக வெற்றி பெற்றது.
அதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி புதிய சாதனையை படைத்துள்ளார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் அவர் விக்கெட் கீப்பராக நூறாவது கேட்சுகள் பிடித்துள்ளார் .கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் அடித்த பந்து பின்னால் நின்றிருந்த தோனி கைக்கு சென்றது.
99 கேட்சுகள் பிடித்திருந்த எம்எஸ் தோனி, தனது 100 ஆவது கேட்சை பிடித்து சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் நிகழ்த்திய சாதனைக்கு அடுத்த இடத்தில் எம்எஸ் தோனி உள்ளார்.
மேலும், ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் பங்கேற்று விளையாடிய சாதனையும் எம்எஸ் தோனி கடந்த போட்டியில் நிகழ்த்தி உள்ளார். அவர் 193 போட்டிகளில் விளையாடிய சுரேஷின் சாதனையை முந்திய நிலையில் தோனிக்கு சுரேஷ் ரெய்னா வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ரோகித் 192 போட்டிகளிலும், விராட் கோலி 180 போட்டிகளிலும் விளையாடி உள்ளனர்.
English Summary
ms dhoni completes 100 catches