வரலாற்றில் முதல்முறையாக பதக்கம் வென்ற இந்தியா! சாதனை படைத்த மணிகா பத்ரா! - Seithipunal
Seithipunal


தாய்லாந்த் நாட்டின், பாங்காங் நகரில் ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று சீன வீராங்கனை தைபேயின் சென் சூ யு-வை, எதிர்த்து ஆடிய இந்திய வீராங்கனை மணிக்கா பத்ரா  4-3 (8-11, 11-9, 11-6, 11-6, 9-11, 8-11, 11-9) என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் தொடரில், வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதி போட்டிக்கு இந்திய வீராங்கனை மனிகா பத்ரா தகுதி பெற்று சாதனை படைத்தார். 

இந்நிலையில், நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், ஜப்பான் நாட்டின் வீராங்கனை மீமா இடோ-வை எதிர்கொண்ட  நம் இந்திய வீராங்கனை மனிகா பத்ரா அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

இதனையடுத்து நடைபெற்ற வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் உலகின் ஆறாவது நிலை வீராங்கனையான ஹினா ஹயாட்டாவை, மணிகா பத்ரா எதிர்கொண்டார். 

நிச்சயம் பதக்கத்தை வென்று, இந்தியாவுக்கு பெருமை தேடி தருவேன் என்று வெறியுடன் ஆடிய நம் வீராங்கனை மணிகா பத்ரா 4-2 (11-6, 6-11, 11-7, 12-10, 4-11, 11-2) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று மாபெரும் சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். வெண்கல பதக்கத்துடன் அவருக்கு 10,000 அமெரிக்க டாலர் பரிசும் கிடைத்தது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

manika batra bronze medal asian cup table tennis


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->