நாட்டை விட்டே வெளியேறி ஆஸ்திரேலியாவில் குடியேறும் பிரபல கிரிக்கெட் வீரர்!! - Seithipunal
Seithipunal


இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர பந்து வீச்சாளரான லஸித் மலிங்கா (வயது 35) மலிங்கா சிறப்பான பந்து வீச்சால் எதிரணியை திணறடிக்க கூடியவர், இவரது பந்துவீச்சு பாணி காரணமாக "சிலிங்க மாலிங்க" என்ற புனைப்பெயரால் அழைக்கப்படும் இவர் சுமார்  225 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 335 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். 

சர்வதேச டி 20 போட்டிகள் அதிக இலக்குகளை  வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளார். ஐ.பி.எல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் மலிங்க, இங்கிலாந்தில் நடைபெற்று முடித்த உலகக் கோப்பைத் தொடருடன் ஓய்வு பெறுவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இன்னும் தந்து ஓய்வு அறிவிப்பை வெளியிடவில்லை.

வங்கதேசம் அணி ஒரு நாள் மற்றும் டி 20 உள்ளிட்ட போட்டிகளில்இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது. இந்தத் தொடருடன் ஓய்வு பெற மலிங்கா முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த போட்டிக்கு பின்னர் இலங்கையில் இருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் குடியேற உள்ளார். அதற்காக அங்கு சொந்தமாக வீடு வாங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த உலகக் கோப்பைத் தொடரில் விளையாடிய மலிங்கா போட்டியை முடித்து கொண்டு நேராக ஆஸ்திரேலியா சென்றுள்ளார். ஓய்வுக்கு பின் அவர் பயிற்சியாளர் பணியை தொடங்க உள்ளதாக தெரிகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

malinga migrants to australia


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->