ஐபிஎல் மினி ஏலம்..  4 முக்கிய வீரர்களை விடுவித்த பெங்களூர் அணி.! - Seithipunal
Seithipunal


2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களை பெங்களூர் அணி அறிவித்துள்ளது.

இந்தியாவில் நடைபெறும் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இதுவரை 15 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் 2023ம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் 16வது ஐபிஎல் சீசன் தொடங்கவுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை முடிவடைந்த நிலையில், ரசிகர்களின் கவனம் தற்போது ஐபிஎல் தொடர் மீது திரும்பி உள்ளது. மேலும் அதற்கான பணிகளை பிசிசிஐ-யும் தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஐபிஎல் மினி ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதி அன்று கொச்சியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மினி ஏலத்திற்காக ஒவ்வொரு அணியும் தங்களுடைய அணியில் இருந்து விடுவிக்கும் வீரர்களின் பெயர் பட்டியலை இன்று (நவம்பர் 15ஆம் தேதி) அனைத்து அணிகளும் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் ஐபிஎல் 2023 சீசனுக்காக பெங்களூர் அணி தக்கவைத்த மற்றும் விடுக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

பெங்களூர் அணி தக்கவைத்த வீரர்கள்: 

விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ், வனிந்து ஹசரங்கா, தினேஷ் கார்த்திக், முகமது சிராஜ், ஹர்ஷல் படேல், ஷாபாஸ் அகமது, ரஜத் படிதார்.

 பெங்களூர் அணி விடுவிக்கப்பட்ட வீரர்கள்:

சித்தார்த் கவுல், கர்ன் சர்மா டேவிட் வில்லி, ஆகாஷ் தீப்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2023 Royal challengers Bangalore released players list


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->