3வது இடத்திற்கு முன்னேற்றப்போவது யார்.? பெங்களூர்-மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை.! - Seithipunal
Seithipunal


16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, மே 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெற உள்ளது. தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி 10 போட்டிகளில் விளையாடி உள்ள நிலையில் 5 போட்டியில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.

அதேபோல் 10 போட்டிகளில் விளையாடி உள்ள பெங்களூர் அணி 5 போட்டியில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், டூப்பிளஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன.

16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 31ஆம் தேதி தொடங்கிய நிலையில், தற்போதைய இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் இனிமேல் நடைபெறும் லீக் போட்டியும் மிகவும் முக்கியமாகும்.

இதில் தோல்வி அடையும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது மிகவும் கடினமாக இருக்கும். அந்த வகையில் இன்றைய தினம் நடைபெறும் போட்டி மும்பை - பெங்களூர் அணிகளுக்கு மிகவும் முக்கியமான போட்டியாகும்.

அதன் காரணமாக இன்றைய போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இன்றைய போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்றைய தினம் வெற்றிபெறும் அணியின் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறும் என்பதை குறிப்பிடத்தக்கது.

இதுவரை நேருக்கு நேர்

இவ்விரு அணிகளும் இதுவரை 31 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், 17 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியும், 14 போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் வெற்றி பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2023 54th match MI vs RCB


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->