#IPL_Breaking: வெற்றிவாகை சூடிய ராஜஸ்தான் அணி.. ரிஸ்க் எடுத்து வெற்றிக்கனியை தட்டிப்பரித்த ஆர்.ஆர்..!! - Seithipunal
Seithipunal


கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஐ.பி.எல் போட்டித்தொடர் 2021 நடைபெற்று வருகிறது. இன்றைய (15/04/2021) போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் போட்டியிடுகிறது. இன்றைய டாஸை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது பவுலிங்கை தேர்வு செய்தது. 

டெல்லி கேபிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில், ஆட்டத்தின் முடிவில் ராஜஸ்தான் அணிக்கு 148 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. இதனையடுத்து, களத்தில் இறங்கிய ராஜஸ்தான் அணி வெற்றி இலக்கை எளிதாக அடைந்துவிடலாம் என்று ஆடி வந்ததாக தெரியவருகிறது. 

ஆனால், ஆட்டத்தின் துவக்கத்திலேயே அடுத்தடுத்த விக்கெட்டுகளால் அணி நிலைகுலைந்த நிலையில், 10 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. களத்தில் இறங்கிய ஜோஸ் பட்லர் 7 பந்துகளில் 2 ரன்கள் அடித்து வெளியேற, மான் வோரா 11 பந்துகளில் 9 ரன்கள் அடித்து வெளியேற, சஞ்சு சாம்சன் 3 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து வெளியேற, சிவம் டியூப் 7 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து வெளியேற, ரியான் பரங் 5 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே அடித்து வெளியேறினார். 

இதனால், 10 ஓவர்களுக்குள் 5 விக்கெட்டை இழந்து ராஜஸ்தான் அணி திணறிய நிலையில், களத்தில் நின்று விளையாடிய டேவிட் மில்லர் அடித்து ஆடினார். களத்தில் இருந்த டேவிட் மில்லர் - ராகுல் திவேட்டியா ஜோடி நின்று ஆட தொங்கியது. இதனால் இன்றைய ஆட்டத்தில் வெற்றியை சூட போவது யார் என்ற பரபரப்பு ரசிகர்களுக்கும் ஏற்பட்டது. 

ராகுல் திவேட்டியா நின்று ஆடுவார் என்று எதிர்பார்த்த வேலையில் 17 பந்துகளில் 19 ரன்கள் என அடித்து ஆடினாலும், கேட்ச் அவுட்டாகி வெளியேறினார். இதனால் ராஜஸ்தான் அணி 14.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. டேவிட் மில்லர் 43 பந்துகளில் 63 ரன்கள் அடித்து அவுட்டாகினர். இறுதியில் கிரீஸ் மோரிஸ் -  ஜெயதேவ் ஜோடி களத்தில் இருந்தது. 

இறுதி நேரத்தில் ஆட்டம் பரபரப்பாக கிரீஸ் மோரிஸ் 18 பந்துகளில் 36 ரன்கள் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். ஜெயதேவ் 7 பந்துகளில் 11 ரன்கள் அடித்திருந்தார். ஆட்டத்தின் முடிவில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்து வெற்றியை பெற்றது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2021 Match RR Vs DC 15 April Match Won the Match


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->