இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பிறகு ஓய்வை அறிவிக்கப் போகும் இந்திய அணியின் மூத்த வீரர்கள்.?
indian team senior players may be announce retirement
டெஸ்ட் போட்டிக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்கு பிறகு இந்திய அணியில் மூத்த வீரர்கள் ஓய்வை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனால் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு பிறகு ஒரு சில சீனியர் வீரர்கள் இளம்வீரர்களுக்கு வழிவிடும் வகையில் ஓய்வை அறிவிக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, 100 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ள இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, இங்கிலாந்து தொடருக்கு பிறகு ஓய்வை அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இஷாந்த் ஷர்மா வயதை கருத்தில் கொண்டும், இளம் வீரர்களுக்கு வழிவிட வேண்டும் என்ற நோக்கத்திலும் ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல இந்திய அணியில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் நீண்ட நாட்களாக தவித்து வரும் ஹனுமா விஹாரியும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர்க்கு பிறகு ஓய்வை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
indian team senior players may be announce retirement