தீவிர பயிற்சியில் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்.. வைரலாகும் வீடியோ.!
Indian cricketer rishabh pant walking in swimming pool video
பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பந்த் கடந்த டிசம்பர் மாதம் தனது குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாட சென்ற போது விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
இதனையடுத்து ஐபிஎல் தொடர் ரிஷப் பந்த் விளையாட மாட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அதேபோல் இந்தாண்டு இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பையிலும் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது.
இந்திய அணியின் முக்கிய வீரரான ரிஷப் பந்தின் இடத்தை பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது. இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற. விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன்கள் இருந்தாலும், 3 ஃபார்மேட்டுகளிலும் ரிஷப் பந்த் அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை யாரும் வெளிப்படுத்தவில்லை.
இந்த நிலையில் குணமடைந்து வரும் ரிஷப் பந்த் நீச்சல் குளத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் 'சிறிய விஷயம், பெரிய விஷயங்கள் மற்றும் இடையில் உள்ள எல்லாவற்றிற்கும் நன்றி' என பதிவிட்டுள்ளார்.
English Summary
Indian cricketer rishabh pant walking in swimming pool video