சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய வீரர் முரளி விஜய் ஓய்வு.! - Seithipunal
Seithipunal


சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய் அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரரான முரளி விஜய் (வயது 38). 2008 முதல் 2015 வரை இந்திய அணிக்காக 61 டெஸ்ட் போட்டிகள், 17 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

மேலும், தமிழக அணியின் தொடக்க வீரரான இவர் 106 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 2 சதங்கள் மற்றும் 13 அரை சதங்களுடன் 2619 ரன்கள் அடித்துள்ளார். இவர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 3 அணிகளுகாக விளையாடி உள்ளார்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அந்த பதிவில் 2002 முதல் 2018 வரையிலான எனது கிரிக்கெட் பயணம் மிகவும் அற்புதமான ஆண்டுகள். இந்தியாவுக்காக விளையாடியது மிகவும் பெருமையாக நினைக்கிறேன். இன்று மகத்தான நன்றியுடனும், பணிவுடனும் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து எனது ஓய்வை அறிவிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் எனது முன்னாள் சக வீரர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian cricketer murali Vijay retired international cricket


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->