ரிஷப் பந்த் நலம் பெற வேண்டி இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பிரார்த்தனை..!! - Seithipunal
Seithipunal


கடந்த டிசம்பர் 30ஆம் தேதி அதிகாலை டெல்லியில் இருந்து உத்தரகாண்டிற்கு ரிஷப் பந்த் சென்ற கார் விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவருக்கு டேராடூனில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மும்பை கொண்டு செல்லப்பட்டார்.

மும்பையில் உள்ள மருத்துவமனையில் ரிஷப் பந்திற்கு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு முதல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்னும் நான்கு வாரங்களில் மற்றொரு அறுவை சிகிச்சை நடைபெறும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய அணியில் ரிஷப் பந்த் இல்லாத சூழலில் அவரது இடத்தை இளம் வீரர் இஷான் கிஷன் நிரப்பி வருகிறார். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜெய்னில் உள்ள மகா காலேஸ்வரர் கோயில் பிரார்த்தனை மேற்கொண்டனர். இன்று காலை நடைபெற்ற பிரார்த்தனையில் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் சூரியகுமார் யாதவ், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பிரார்த்தனை முடிவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் வீரர் சூரியகுமார் யாதவ் பேசியதாவது "இந்திய அணியில் ரிஷப் பந்த் மிக முக்கியமான வீரர். அவர் விரைவில் குணமடைந்து இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என்று நாங்கள் பிரார்த்தனை செய்துள்ளோம். அவரது கம்பேக் இந்திய அணிக்கு மிகவும் முக்கியம். நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றியுள்ளோம். கடைசி போட்டியிலும் வெற்றி பெறுவோம்" என செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian cricket players pray for Rishabh Pant recovery


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->