தோல்வி எதிரொலி..! டி20 உலகக்கோப்பை வாய்ப்பை இழந்த இந்தியா அணி - இரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய முடிவு.!
இன்று காலை 5.30 மணிக்கு மணிக்கு ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
பெண்களுக்கான இருபது ஓவர் உலகக்கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெற்ற முதலாவது செமிபைனல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியுள்ளது.
இதனை தொடர்ந்து நடந்த இரண்டாவது செமிபைனல் ஆட்டத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.
இன்று காலை 5.30 மணிக்கு மணிக்கு ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மந்தானா பந்துகளை நாலா புறமும் சிதறடித்தார்.
அவருக்கு பிறகு அமைந்த கூட்டணி வெகுநேரம் நிலைக்கவில்லை. 89 ரன்களுக்கு 3 விக்கெட் என்று இருந்த நிலையில், அடுத்த 10 ரன்களை சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.
இறுதியில 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்களே எடுத்தது. மந்தனாவை தவிர மற்றவர்களின் ஆட்டம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சோபிக்கவில்லை.
அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியை பந்துவீச்சில் பதம் பார்த்தது இந்திய அணி. ஒரு ரன்னுக்கே விக்கெட் விழுந்ததால் இந்திய அணிக்கு சற்று நம்பிக்கை ஏற்பட்டது.
அதற்கு பிறகு நம்பிக்கை சிறுக சிறுக தகர்ந்தது. அதற்கு பிறகு அமைந்த ஜோன்ஸ் மற்றும் நடலிய்யே ஸீவெர் ஜோடி மெல்ல மெல்ல வெற்றி இலக்கை நோக்கி அழைத்துச்சென்றது.
இறுதியில் 17.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கைத் துரத்திப்பிடித்தது இங்கிலாந்து அணி.
தொடர் வெற்றிகளை குவித்து வந்தாலும், இந்த தோல்வியினால் பைனல் போட்டிக்கு தகுதி பெறாமல் இந்திய அணி வெளியேறியுள்ளது.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி வரும் ஞாயிறன்று நடைபெறுகிறது.
English Summary
India lost semi final against England in WC