DAY3 : இந்தியா - வங்கதேசம் டெஸ்ட் போட்டி..  வங்கதேசம்150 ரன்களுக்கு ஆல் அவுட்.. வெற்றியை நோக்கி இந்திய அணி.! - Seithipunal
Seithipunal


இந்திய அணிக்கு எதிரான  முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 150 ரன்கள் எடுத்துள்ளது.

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

முதல் முதலில் நடைபெற்ற 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வங்கதேசம் தொடரை கைப்பற்றியுள்ளது. அதனைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

அதன்படி, இந்தியா வங்காளதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை சட்டகிராம் மைதானத்தில்  நடைபெறநடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி  முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்தது. 

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நேற்று 2ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 10 விக்கெட் இழப்பிற்கு 404 ரன்கள் குவித்தது. அதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த வங்கதேச அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது.

இந்த நிலையில் இன்று 3ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் இழந்து வங்கதேச அணி 150 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதன்மூலம் இந்திய அணி முதல் இன்னிங்சில் 254 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்களும், முகமது சிராஜ் 3 விக்கெட்களும் வீழ்த்தினர். இதனையடுத்து இந்திய அணி தற்போது 2வது இன்னிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs BAN Day 3 Bangladesh 1st innings all out of 150 runs


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->