ஹர்திக் பாண்ட்யாவின் அதிரடி.. ரத்த கண்ணீர் விட்ட ராஜஸ்தான்.. சாம்பியன் பட்டத்தை வென்ற குஜராத்.! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் 15வது சீசனின் இறுதிப் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜோஸ் பட்லர் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு கேப்டன் சஞ்சு சாம்சன் 14 ரன்களில் வெளியேறினார். படிக்கல்  2 ரன்களில் வெளியேறினார். ஹெட்மயர் 11 ரன்களிலும், அஸ்வின் 6 ரன்னுலும், டிரெண்ட் போல்ட்  11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்களை எடுத்தது. குஜராத் அணி சார்பில் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்களையும், சாய் கிஷோர் 2 விக்கெட், ரஷித் கான், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

இதையடுத்து, 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் களமிறங்கினர். சாகா 5 ரன்னிலும், மேத்யூ வேட்  8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஹர்திக் பாண்டியா 34 ரன்களில் ஆட்டமிழந்தார். சுமன் கில் பொறுப்புடன் விளையாடி 45 ரன்கள் எடுத்து எடுத்தார். அதிரடியாக விளையாடிய டேவிட் மில்லர் 19 பந்துகளில் 32 ரன்களை அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

குஜராத் அணி 18.1 முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் அணி பங்கேற்ற முதல் ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat Titans Winning IPL Title


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->