#IPL2022 : ஐபிஎல் கோப்பையுடன் ஊர்வலம் சென்ற குஜராத் அணி.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் 15வது சீசன் கடந்த 2 மாதங்களாக கோலகலமாக நடந்து வந்த நிலையில், ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இந்த இறுதி போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.

பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் ஆரம்பமான இந்த இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் சீசனிலே சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை வைத்துள்ளது.

இந்நிலையில், முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற குஜராத் அணியினர் குஜராத் தலைநகர் காந்தி நகரில் வெற்றிக் கோப்பையை ஊர்வலமாக சென்றனர். ஐபிஎல் கோப்பையுடன் சென்ற வண்டியில் குஜராத் அணி வீரர்கள் உடனிருந்து வெற்றி கோஷங்களை எழுப்பினர். வழியெங்கும் ரசிகர்கள் ஆரவாரமாக கோஷமிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat team marches with IPL trophy


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->