உலக சாதனை படைத்த ஐபிஎல் போட்டி.. நரேந்திர மோடி மைதானம் கின்னஸ் சாதனை.! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் 15வது சீசன் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களாக கோலகலமாக நடைபெற்றது. இதில் இறுதி போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.

பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் ஆரம்பமான இந்த இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் சீசனிலே சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.

இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் அதிக ரசிகர்கள் கண்டுகளித்த டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்ற மைதானம் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளது. அந்த வகையில் கடந்த மே மாதம் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியை 1,01,566 பேர் கண்டு களித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Guinness World record for IPL final 2022


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->