சாலை விபத்தில் சிக்கிய முதல் பழங்குடியின கிரிக்கெட் வீரர்.!! தற்போது நிலை என்ன? - Seithipunal
Seithipunal


ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் வரலாற்றில் முதல் பழங்குடியின கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்ற ராபின் மின்ஸ் விபத்தில் சிக்கியுள்ளார்.

கடந்த ஐபிஎல் ஏலத்தில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்டரான ராபின் மின்ஸை குஜராத் டைட்டன்ஸ் அணி 3 கோடியே 60 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

இதன் மூலம் அவர் ஐபிஎல் தொடரில் இடம் பெறும் முதல் பழங்குடியின வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இந்த நிலையில் ராபின் மிம்ஸ் இரு சக்கர வாகன விபத்தில் சிக்கியதில் அவருக்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவர் நன்றாக இருப்பதாக அவருடைய தந்தை தற்போது தகவல் தெரிவித்துள்ளார். விபத்தில் இருசக்கர வாகனம் சிறிய அளவில் சேதமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

First tribal IPL cricket player Robin minnis met accident


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->