இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இருந்து இந்திய அணியின் முக்கிய வீரர் விலகல்.!!
eng vs ind first one day match virat kohli withdraws
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடியது. இதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் விளையாட உள்ளது.
டி20 தொடரை இந்திய அணி 2 - 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. முதல் போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 49 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் 17 வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்ற உத்வேகத்துடன் இந்திய அணி களமிறங்குகிறது. இந்திய அணியில் பேட்டிங்கில் ரோகித் சர்மா, ஷிகர் தவான், சூரியகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹார்திக் பாண்டியா உள்ளனர். பந்துவீச்சில் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல் உள்ளனர்.
இந்நிலையில், காயம் காரணமாக நேற்றைய பயிற்சியில் விராட் கோலி பங்கேற்கவில்லை. விராட் கோலிக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டதில் இடுப்பில் அவருக்கு காயம் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாகவும், முதல் ஒருநாள் போட்டியில் அவர் விளையாட வாய்ப்பில்லை என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
English Summary
eng vs ind first one day match virat kohli withdraws