இங்கிலாந்து அணி அபாரம்.. 100 வித்தியாசத்தில் வெற்றி.!! - Seithipunal
Seithipunal


இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 49 ஓவருக்கு 246 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அதில் அதிகபட்சமாக மொயீன் அலி 47 ரன்னும், டேவிட் வில்லே 41 ரன்னும், ஜேனி பேர்ஸ்டோவ் 38 ரன் எடுத்தனர். இந்திய அணி சார்பில் சாஹல் 4 விக்கெட்டுகளை, பும்ரா, ஹார்திக் பாண்டியா தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார். 

247 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியனின் கேப்டன் ரோகித் சர்மா டக்அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். தவான் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். விராட் கோலி 16 ரங்களில் ஆட்டமிழந்தார். அடுத்த களம் இறங்க சூரியகுமார் யாதவ் 27 ரன்னுக்கு தனது விக்கெட்டை பறி கொடுத்தார். ஹார்திக் பாண்டியா, ஜடேஜா தலா 29 ரன்கள் அடித்தனர். ஷமி 23 ரன் எடுத்தார். 

38.5 ஓவருக்கு இந்திய அணி 146 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 100 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி சார்பில் டோப்லே 6 விக்கெட்களை வீழ்த்தினார். மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் 1-1 என சம நிலையில் உள்ளனர். வெற்றியை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ENG vs IND 2nt ODI Match ENG Win


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->