ENG vs IND : அசத்தலான வெற்றியுடன் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி.!!
ENG vs IND 2nd T20 Match IND Win
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பந்துவீச்சு தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் களமிறங்கினர்.
இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரோகித் சர்மா 20 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய கோலி ஒரு ரன்னுக்கு வெளியேறினார். அதையடுத்து, ரிஷப் பண்ட் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் 15 ரன்னிலும், ஹார்திக் பாண்டியா 12 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 12 ரன்னிலும், ஹர்ஷல் படேல் 13 ரன்னிலும் அடுத்தடுத்து டிக்கெட் விழுந்தாலும், ஜடேஜா பொறுப்புடன் ஆடினார்.
20 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களை எடுத்தது. ஜடேஜா 46 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்கமால் இறுதி வரை இருந்தார். இங்கிலாந்து அணி சார்பில் ஜோர்டான் 4 விக்கெட்டுகள், கிலீசன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து,171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்ப முதலே இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துகளை தாக்கு பிடிக்க முடியாமல் விட்டுக்களை பறி கொடுத்தனர். குறிப்பாக புவனேஸ்வர் குமார் சிறப்பாக பந்துவீசி தொடக்கத்திலேயே ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் என முக்கிய விக்கெட் களை எடுத்தார். அதன்பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரியா தொடங்கியது. மொயீன் அலி 35 ரன்கள் எடுத்தார். இறுதியில் அதிரடியாக விளையாடிய டேவிட் வில்லி 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இங்கிலாந்து அணி 17 முடிவில் 121 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இது எடுத்து இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரை 2 - 0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. புவனேஷ்வர் குமார் 3 விக்கெட், பும்ரா, சஹால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
English Summary
ENG vs IND 2nd T20 Match IND Win