முதல் போட்டியிலே அசத்திய இந்திய அணி.. 50 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி.!!
ENG vs IND 1st T20 Match IND Win
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ரோகித் சர்மா 24 ரன்களில் ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய தீபக் ஹூடா, சூரியகுமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவிக்க தொடங்கினர். தீபக் ஹூடா 33 ரன்னிலும், சூரியகுமார் யாதவ் 39 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து இறங்கிய ஹர்திக் பாண்டியா இறங்கி சிறப்பாக விளையாடினார். 33 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். அக்சர் படேல் 17 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் 11 ரன்களில் வெளியேறினார். இறுதியில் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேசன் ராய் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஜோஸ் பட்லர் டக் அவுட் ஆகி வெளியேறினார். டேவிட் மலர் 21 ரன்னில் வெளியேறினார். ஹேரி புரூக் 28 ரன்னில் ஆட்டமிழந்தார். மொயீன் அலி 36 ரன்கள் ஆட்டமிழந்தார். கிறிஸ் ஜோர்டான் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
19.3 முடிவில் 148 ரன்கள் எடுத்த நிலையில், அனைத்து விக்கெட் இழந்தது 50 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் ஹர்திக் பாண்டியா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சாஹல் மற்றும் அறிமுகவீரர் அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கட்களை கைப்பற்றினர். புவனேஸ்குமார், ஹர்சல் படேல் தலா ஒரு விக்கெட் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
English Summary
ENG vs IND 1st T20 Match IND Win