ஆறாவது முறையாக பலான் டி ஆர் விருது பெற்று சாதனை படைத்த மெஸ்ஸி.!
ballon d or award 2019 winner
ஃபிரான்ஸ் கால்பந்து சம்மேளனத்தின் சார்பில் சிறந்த கால்பந்து வீரருக்கான 'பலான் டி ஆர்' ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம், அந்தவகையில் இந்தாண்டுக்கான விருது வழங்கும் விழா பாரிஸில் நடைபெற்றது.
இத்தாண்டுக்கான விருதினை பார்சிலோனா கால்பந்து அணியின் கேப்டன் மெஸ்ஸி ஆறாவது முறையாக பெற்றுள்ளார். சென்ற ஆண்டு இந்த விருதை பெற்ற ரியல் மாட்ரிட் வீரர் லூகா மாட்ரிக், நடப்பு ஆண்டுக்கான பலூன் டி ஆர் விருதை மெஸ்ஸிக்கு வழங்கினார்.
ஆறாவது முறையாக பலூன் டி ஆர் விருதை வாங்கி மெஸ்ஸி சாதனை படைத்துள்ளதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கால்பந்தாட்டத்தில் தொடர்ச்சியாக தனது ஆதிக்கத்தை செலுத்தி வரும் மெஸ்ஸி இந்த 2019 ஆம் ஆண்டில் மட்டும் ஃபிபாவின் சிறந்த வீரருக்கான விருது, அதிக கோல்கள் அடித்தற்காக வழங்கபடும் கோல்டன் பூட் விருதை ஆறு முறை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பலூன் டி ஆர் விருதை ஆறாவது முறையாக பெற்றதன் மூலம், மிகச் சிறந்த மூன்று விருதுகளையும் தலா ஆறு முறை பெற்ற ஒரே வீரர் என்ற சிறப்பையும் மெஸ்ஸி பெற்றுள்ளார்.
English Summary
ballon d or award 2019 winner