ஆசியக்கோப்பை : வாழ்வா? சாவா? போட்டியில் இந்தியா - இலங்கை அணியுடன் இன்று மோதல்.! - Seithipunal
Seithipunal


ஆசிய கோப்பை கிரிக்கெட்
 சூப்பர் 4 சுற்று போட்டியில் இன்று இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன.

15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 6 அணிகள் கொண்ட ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் போட்டிகள் துபாய் மற்றும் ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

 இதில், முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 

சூப்பர்-4 சுற்றில் 6 போட்டிகள் நடைபெறும். அதைத் தொடர்ந்து செப்டம்பர் 11-ம் தேதி துபாயில் இறுதிப் போட்டி நடைபெறும். 

நேற்று முன்தினம் நடந்த இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சூப்பர் 4 சுற்று 2வது போட்டியில் இந்திய அணி நூலிழையில் தோல்வியை தழுவியது. 

இதனையடுத்து இன்று நடைபெறும் சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்திய அணி இலங்கையை எதிர்கொள்கிறது. மேலும் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியை வென்றுள்ள நிலையில், இன்று இந்தியாவையும் வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த நிலையில் இன்று இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 3வது சூப்பர்-4 சுற்று போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Asia Cup super 4 round india vs srilanka today


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->