ஓய்வுக்குப் பின்னர் அரசியலில் இறங்கும் தோனி., முன்னாள் அமைச்சர் வெளியிட்ட பரபரப்பு தகவல்!!
after retirement dhoni joining in bjp
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு 38 வயதாகிறது, உலகக்கோப்பை தொடருடன் கிரிக்கெட்லிருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன ஆனால் ஓய்வு குறித்து பரவி வரும் தகவல்களுக்கு பதிலளிக்காமல் மவுனம் காத்து வருகிறார். தற்போது தோனியின் ஓய்வு தொடர்பாக சமூகவலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. அப்படி அவர் ஓய்வு பெறும் பட்சத்தில் அடுத்ததாக அவரது திட்டம் என்னவாக இருக்கும் என்றும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், ஓய்வுக்குப் பிறகு தோனி பாஜகவில் இணைய வாய்ப்பு உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சஞ்சய் பஸ்வான் தெரிவித்துள்ளார். பாஜகவில் இணைவது தொடர்பாக தோனியிடம் மிக நீண்ட காலமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். ஆனால் தோனி கிரிக்கெட்லிருந்து ஓய்வு பெரும் அறிவிப்பை வெளியிட்ட பின்னரே இறுதி முடிவு என்ன என்பது தெரியும் என சஞ்சய் பஸ்வான் தெரிவித்தார்.
English Summary
after retirement dhoni joining in bjp