நாளை புரட்டாசி மாத பௌர்ணமி... இந்த மூன்று வழிப்பாட்டையும் அவசியம் கடைபிடியுங்கள்.! - Seithipunal
Seithipunal


புரட்டாசி மாத பௌர்ணமி...!!

புரட்டாசி மாதம் பெருமாளுக்குரிய அற்புத மாதம் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த மாதத்தில் வரக்கூடிய அமாவாசை, மகாளய அமாவாசை என்ற மிக முக்கிய நாளாக பார்க்கப்படும், அதே சமயம், இந்த மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமியும் மிக அற்புத விரத நாளாக பார்க்கப்படுகிறது.

புரட்டாசி மாதத்தில் வருகின்ற பௌர்ணமியன்று அந்த சந்திரனை போல அன்னையின் முகம் பிரகாசமாக ஜொலிக்கும். அம்பிகையானவள் சந்திர மண்டலத்தின் அமுதமாய் அன்றைய தினம் விளங்குவாள். அதனால் தான் அம்பாளுக்கு சந்திர மண்டல மத்யகா என்ற பெயரும் உண்டு.

அதன்படி புரட்டாசி மாத பௌர்ணமி நாளை அக்டோபர் 09ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது.

புரட்டாசி பௌர்ணமி சிறப்பு :

புரட்டாசி பௌர்ணமி தினத்தில் காலை வேளையில் சிவ வழிபாடு செய்தால், முற்பிறப்பில் செய்த பாவங்கள் நீங்கும்.

நண்பகலில் சிவ வழிபாடு செய்தால், முற்பிறப்பில் செய்த பாவங்கள் மட்டும் இல்லாமல், இந்தப் பிறவியில் செய்த பாவங்களும் நீங்கும். 

மாலை பிரதோஷ வேளையில் சிவனை வழிபாடு செய்தால், சிவபெருமானின் அருளால் ஏழேழு பிறவிகளில் செய்து முற்றிய பாவங்கள் அனைத்தும் நீங்குவதுடன், விரும்பிய எல்லா வேண்டுதல்களும் நிறைவேறும் என்பதே புரட்டாசி மாத பௌர்ணமி நாளின் சிறப்பாகும்.

குலதெய்வ வழிபாடு :

புரட்டாசி மாத பௌர்ணமியில் குலதெய்வத்தையும், பெருமாளையும் மனதார வழிபட்டு, பிரார்த்தனை செய்து வந்தால் மகத்தான பலன்களை பெறலாம். மேலும் வீட்டில் இதுவரை இருந்த தரித்திர நிலையில் இருந்து விடுபடலாம்.

முக்கியமாக பௌர்ணமி நாளில், குலதெய்வ வழிபாடு மிக மிக முக்கியமானது. இந்த நன்னாளில், குலதெய்வ கோயில் அருகில் இருந்தால், சென்று வழிபட்டு வருவது நன்மைகளை வாரி வழங்கும். சந்ததியினர் சிறக்க வாழ்வார்கள்.

குலதெய்வ கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் விளக்கேற்றி குலதெய்வ வழிபாடு செய்யலாம். குலசாமி படத்துக்கு மாலையிட்டு, அல்லது பூக்களால் அலங்கரித்து, குலசாமிக்கி சர்க்கரைப் பொங்கல் அல்லது வெண் பொங்கல் முதலான குலதெய்வத்துக்கு படையலிடும் உணவை நைவேத்தியமாக செய்து, வேண்டிக்கொள்ளலாம்.

சிவ வழிபாடு :

பௌர்ணமி துவங்கியதும் சிவனுக்கு வீட்டில் அல்லது கோவிலுக்கு சென்று வில்வ அர்ச்சனை செய்ய வேண்டும். 

சுத்தமான பசு நெய் கொண்டு சிவனுக்கு அகல் விளக்கில் தீபம் போட வேண்டும். இவ்வாறு செய்ய சிவனுடைய அருள் கிடைத்து இதுவரை நீங்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் மாறி நன்மைகள் நடக்கும். 

இந்த நாளில் விரதம் இருந்து சிவ வழிபாடு செய்தால் முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கும். செல்வ வளம் பெருகும். லட்சுமி கடாட்சம் பெருகும். மேலும் தெய்வங்களின் அனுக்கிரகம் வீடு தேடி வரும் என்பது நம்பிக்கை.

மகாலட்சுமி பூஜை:

சிவ வழிபாடு மட்டுமல்லாமல் இந்நாளில் மகாலட்சுமி பூஜை செய்வது கூடுதல் சிறப்பு பலனை கொடுக்கும்.

மகாலட்சுமிக்கு தாமரை மலர் சூட்டி சகஸ்ர நாம அர்ச்சனை செய்து குத்து விளக்கு தீபம் ஏற்றி, குங்கும அர்ச்சனை செய்தால் வேண்டிய வரம் வேண்டிய படி கிடைக்கும். 

கணவன்-மனைவி இடையே ஒற்றுமை உண்டாக, இப்பூஜையை செய்யலாம். மேலும் குழந்தை இல்லாத தம்பதிகள் மகாலட்சுமியை வேண்டி வரம் கேட்டால் உடனே குழந்தை பாக்கியம் உண்டாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tomorrow purattasi fullmoon prayer


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->