பணம் தான் பிரச்சனையா? உங்களின் பணப்பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் தாமரை மணிமாலை.!
Money problem solved by thamarai mani malai
மக்களின் கஷ்டங்களை தீர்ப்பதில் முதலிடம் வகிப்பது பணம் மட்டுமே. சுவாசம், பேச்சு, செயல்பாடு என்று எதிலும் இந்த பணத்திற்குதான் முதலிடம் கொடுக்கிறோம்.
அரும்பாடுபட்டு உழைத்தாலும் இந்த பணம் நம் அருகில் வரமாட்டேன் என்கிறதே என்பதுதான் மக்களின் வேதனை. அன்றாடம் நமக்கு தேவையான பணத்தேவைகளை ஓரளவிற்கு பூர்த்தி செய்யும் விதமாக இயற்கை நமக்கு அளித்த வரம்தான், தாமரை மணிமாலை.
அபரிமிதமான நேர்மறை சக்தியை கொண்ட தாமரை மணிமாலை பணம் ஈர்க்கும் மாலையாக மக்களுக்கு நல்லவற்றை அள்ளித்தருகிறது. தாமரை மணிமாலை ஒரு வீட்டில் இருக்கிறது என்றால் அனைத்து ஐஸ்வர்யங்கள் அங்கு அதிகளவில் ஏற்படும் என்பது நம்பிக்கையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள்..
கணவன் - மனைவி ஒற்றுமையின்மை..
பொருளாதாரத்தில் நலிவு..
வேலையின்மை போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வை அளிக்கிறது தாமரை மணிமாலை.
இன்றைய சூழலில் எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும் பணத்தேவை என்பது தீராத பிரச்சனையாக உள்ளது. பணப்பிரச்சனைகளால் மனதில் தேவையற்ற குழப்பங்கள், எதிர்மறை சிந்தனைகள், மன உளைச்சல், நிம்மதியின்மை என பல்வேறு பிரச்சனைகளால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
நாம் ஒரு பிரச்சனையை எதிர்கொள்கிறோம் என்றால் முதலில் தேவை நேர்மறை சிந்தனை மற்றும் நிதானம். சிறிது யோசித்து பாருங்கள், எந்தவொரு வேலையையும் அவசர அவசரமாக செய்யாமல் சற்று நிதானமாக செய்திருந்தால் எளிதாக இருந்திருக்கும். அதற்கான பலனும் சாதகமாக அமைந்திருக்கும் என நீங்களே சிந்தித்திருப்பீர்கள்.
இந்த அவசர உலகில் ஓடவே நேரம் போதவில்லை எப்படி நிதானமாக செயல்படுவது? அப்படியே நிதானமாக இருந்தால் எங்களின் பணத்தேவையை எப்படி தீர்ப்பது? என நீங்கள் கேட்கும் கேள்வி எங்களுக்கு புரிகிறது.
உங்களின் பணப்பிரச்சனைகளுக்கும், எதிர்மறை சிந்தனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து நேர்மறை சிந்தனைகளோடு வாழ்க்கையில் வெற்றி பெற வழிகாட்டுகிறது தாமரை மணிமாலை.
English Summary
Money problem solved by thamarai mani malai