சுக்கிர பகவானின் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும் அத்தி மர விநாயகர்.! - Seithipunal
Seithipunal


அத்தி மர விநாயகர் மற்றும் வெள்ளெருக்கு விநாயகர்:

பிரச்சனைகளை தீர்க்கும் அத்தி மர விநாயகர் :

அத்தி மரம் மிகவும் வலிமையான மரம். சுக்கிரனுடைய அம்சமாக இந்த அத்தி மரம் விளங்குகிறது.

சுக்கிரன் நீச்சமாக, பகையாக இருப்பவர்கள், சுக்கிரன் ஜாதகத்தில் கெட்டுப் போய்விடுதல் போன்றவற்றிற்கு நடைமுறைப் பரிகாரம் என்று பார்த்தால் ஒரு அத்தி மரத்தை நட்டு வளர்த்து பராமரித்தாலே அவர்களிடையே சண்டை, சச்சரவுகள் எல்லாம் நீங்கும்.

அத்திக்கு நல்ல அதிர்வலைகள் உண்டு. எனவே அத்தி மரப் பலகையில் உட்கார்ந்து தவம் செய்தால் பூமியினுடைய புவி ஈர்ப்பு விசை நம்மை அதிகம் தாக்காமல், எந்த மந்திரத்தை உச்சரிக்கிறோமோ, அந்த மந்திரத்தினுடைய பலன் முழுமையாகக் கிடைக்கும்.

கணவன்-மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு இன்றி கடைசி வரை பிரியாமல் இருப்பதற்கும், வீட்டில் அத்தி மரம் நட்டு வைத்து பராமரித்து வருவது நல்லது என்பது ஐதீகம்.

அத்தி மரம் சிலை வடிக்க ஏற்றது. அத்தி மரத்தில் பல்வேறு சிலைகள் செய்யப்படுகின்றன. அவற்றில் ஒன்று தான் அத்தி விநாயகர்.

அத்தி மரத்தால் செய்யப்படுகின்ற விநாயகரை வீட்டில் வாங்கி வைப்பதால் வீட்டில் எப்போதும் நேர்மறை ஆற்றல்கள் உண்டாகும்.

கணவன் - மனைவி பிரச்சனைகள் நீங்கும்..

திருமணத்தடை அகலும்..

செல்வம் சேரும்..

சுக்கிரனின் ஆதிக்கத்தை பெறலாம்..

செல்வத்தை ஈர்க்கும் வெள்ளெருக்கு விநாயகர் :

வெள்ளெருக்கன் செடியானது அதீதமான உயிர் சக்தி கொண்டது. சூரியனுக்குரிய மூலிகையாக கருதப்படும் வெள்ளெருக்கு, சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை நுட்பமாக கிரகித்து வளரும் தன்மை பெற்றது.

மேலும், வெள்ளெருக்கு வேருக்கு தெய்வீக சக்தியுள்ளது. எனவே இந்த வேரைப் பயன்படுத்தி வடிக்கப்படும் சிலையும் மிகுந்த சக்தி வாய்ந்ததாகும். வெள்ளெருக்கு வேரைப் பயன்படுத்தி வடிக்கப்படும் விநாயகர் சிலைகள் வெள்ளெருக்கு விநாயகர் சிலைகள் (பிள்ளையார்) என்றழைக்கப்படுகின்றன.

தன ஆகர்ஷண சக்தியை அள்ளிக் கொடுக்கக்கூடிய வல்லமையானது இந்த வெள்ளெருக்கு விநாயகருக்கு அதிகமாக உள்ளது.

வெள்ளெருக்கு பிள்ளையாரை புதியதாக வீட்டுக்கு வாங்கி வந்தவுடன் விநாயகர் சிலை முழுவதும் அரைத்த மஞ்சளை பூசி நிழலிலேயே உளற வைத்துக்கொள்ள வேண்டும். இதன்பிறகு உங்களது பூஜையறையில் வைத்து வழக்கம்போல் வழிபடலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chukra affect relief using velleruku vinayagar


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->