சிதம்பரம் | கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன் கோயில் ஆடி மாத தீமிதி உற்சவத்தை முன்னிட்டு கொடி ஏற்றம்.!
chidamparam keezhatheru mariyamman temple festival
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன் கோயிலில் நேற்று ஆடி மாத தீமிதி உற்சவத்தை முன்னிட்டு கொடி ஏற்றப்பட்டது.
கொடியேற்றத்துக்கு முன்னதாக கொடி வீதிவலமாக கொண்டு வரப்பட்டு ஸ்ரீமாரியம்மன் கருவறைக்கு எதிரே கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி நிரல் :
வருகின்ற 26-ம் தேதி தெருவடைச்சான் உற்சவமும்,
31-ம் தேதி தேர்த் திருவிழாவும் நடைபெற உள்ளது.
ஆகஸ்ட் 1-ம் தேதி தீமிதி உற்சவமும்,
ஆகஸ்ட் 2-ம் தேதி விடையாற்றி உற்சவமும்,
ஆகஸ்ட் 3-ம் தேதி மஞ்சள் நீர் விளையாட்டு மற்றும் ஊஞ்சல் உற்சவமும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் கோவில் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
English Summary
chidamparam keezhatheru mariyamman temple festival