திருப்பதியில் தொடங்குகிறது வருடாந்திர தெப்போற்சவம் - எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


திருமலை - திருப்பதி தேவஸ்தானம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்து இருப்பதாவது:- "திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் நாளை தொடங்கி 24-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. 

அதைமுன்னிட்டு முதல் நாளான நாளை இரவு உற்சவர்களான ராமச்சந்திரமூர்த்தி, சீதா, லட்சுமணர் மற்றும் ஆஞ்சநேயர் தெப்பத்தேரில் எழுந்தருளி மூன்று சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

* 2-வது நாள் உற்சவர்கள் சத்தியபாமா, ருக்மணி, ஸ்ரீகிருஷ்ணர் 3 சுற்றுகள் பவனி வருகிறார்கள்.

* 3-வது நாள் உற்சவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி 3 சுற்றுகள் பவனி வருகிறார்கள்.

* 4-வது நாள் உற்சவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி 5 சுற்றுகள் பவனி வருகிறார்கள்.

* 5-வது நாள் உற்சவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி 7 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

தெப்போற்சவத்தால் 20, 21-ந்தேதிகளில் சகஸ்ர தீபலங்கார சேவை, 22, 23, 24-ந்தேதிகளில் ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை ரத்து செய்யப்படுகின்றன" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

annual theppotsavam in tirupati


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->