இன்றைய தினப்பலன்கள்... எந்த ராசிக்காரர்களுக்கு வரவு? எந்த ராசிக்காரர்களுக்கு செலவு? - Seithipunal
Seithipunal


மேஷம்:

எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். உத்தியோகம் சம்பந்தமான பயணங்களின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். மறைமுகமாக இருந்துவந்த தடைகளை அறிவீர்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வேலைப்பளு அதிகரிக்கும் நாள்.

ரிஷபம்:

குடும்ப உறுப்பினர்களிடத்தில் சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். தொழில் வளர்ச்சிக்கான முயற்சிகளில் நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். மனதில் இருந்துவந்த குழப்பங்களுக்கு தெளிவு கிடைக்கும். அரசு தொடர்பான பணிகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். பேசும் வார்த்தைகளில் நிதானமும், கவனமும் வேண்டும். நன்மையான நாள்.

மிதுனம்:

நண்பர்களுடைய சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மற்றவர்களை நம்பி புதிய பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. உயர் அதிகாரிகளின் விஷயத்தில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் மதிப்பும், மரியாதையும் மேம்படும். வெளியூர் தொடர்பான பயண முயற்சிகள் நிறைவேறும். லாபகரமான நாள்.

கடகம்:

தந்தை வழி உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். தொழிலில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது. ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். உடல் நலத்தில் திடீர் பாதிப்புகள் வரலாம். எந்தவொரு செயலிலும் பதற்றமின்றி செயல்படவும். விரயம் உண்டாகும் நாள்.

சிம்மம்:

திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உயர்கல்வி தொடர்பான வாய்ப்புகள் கிடைக்கும். போட்டிகள் நிறைந்த நாள்.

கன்னி:

விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். மனதில் நேர்மறை சிந்தனையுடன் செயல்படுவது முன்னேற்றத்தை ஏற்படுத்தும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். அரசு சார்ந்த பணிகளில் நிதானம் வேண்டும். வழக்கு சம்பந்தமான பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். தாமதம் நிறைந்த நாள்.

துலாம்:

உத்தியோக பணிகளில் பொறுப்புகள் குறையும். உடன்பிறந்தவர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் உண்டாகும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். வரவுகள் மேம்படும் நாள்.

விருச்சிகம்:

புதிய வேலை நிமிர்த்தமான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். புதிய நபர்களிடம் தேவையற்ற விஷயங்களை பகிர்வதை குறைத்துக் கொள்ளவும். உறவினர்களின் வழியில் எதிர்பாராத அலைச்சல்கள் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைத்தாலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

தனுசு:

உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். வியாபார ரீதியான வழக்கு விஷயங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.

மகரம்:

உடன்பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். எதிர்பாராத பயணங்களால் நன்மைகள் உண்டாகும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சுபச்செலவுகள் உண்டாகும். புதிய முயற்சிகளில் மாற்றமான முடிவுகள் கிடைக்கும். ஆர்வம் அதிகரிக்கும் நாள்.

கும்பம்:

திட்டமிட்ட காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். புரிதல் ஏற்படும் நாள்.

மீனம்:

வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். உழைப்பிற்கேற்ப நற்பலன்கள் கிடைக்கும். பெரியவர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். பதற்றமின்றி செயல்பட வேண்டிய நாள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

23 nov rasipalan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->