இன்றைய (04-05-2022) ராசி பலன்கள்.. எந்தெந்த ராசிக்காரர்களுக்கு தனவரவு மேம்படும்.! - Seithipunal
Seithipunal


மேஷம்

சகோதரர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். வியாபார பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்காலம் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். உற்சாகமான நாள்.

ரிஷபம்

எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு குடும்ப உறுப்பினர்களிடம் ஆலோசனை செய்து முடிவு எடுப்பீர்கள். நண்பர்களின் சந்திப்பு புதிய நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும். புதிய நபர்களிடம் பேசும் பொழுது பேச்சுக்களில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் முதலீடும், கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் அதிகரிக்கும். போட்டி நிறைந்த நாள்.

மிதுனம்

தந்தைவழி உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோக பணிகளில் பொறுமையுடன் செயல்படுவது உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் மாறுபட்ட சிந்தனைகளின் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள். தெய்வீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.

கடகம்

வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குழந்தைகளின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். நீண்ட நாட்களாக தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். ஓய்வு நிறைந்த நாள்.

சிம்மம்

உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். வரவு மேம்படும் நாள்.

கன்னி

அரசு சார்ந்த பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் மறையும். புதிய முயற்சிகளில் அனுபவம் கிடைக்கும். சகோதரர்களின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மனதில் எதையும் சமாளிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். வியாபார பணிகளில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். அறிமுகம் கிடைக்கும் நாள்.

துலாம்

மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். நுணுக்கமான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வாழ்க்கை துணைவரின் மூலம் விரயங்கள் ஏற்படும். உயர்கல்வி தொடர்பான தேடல் அதிகரிக்கும். நிதானம் வேண்டிய நாள்.

விருச்சிகம்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தாய்மாமன் வழியில் எதிர்பாராத அலைச்சல்கள் ஏற்படும். மனதில் சிறு சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் கவனம் வேண்டும். வாழ்க்கை துணைவருடன் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். விருப்பம் நிறைவேறும் நாள்.

தனுசு

குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் நினைத்த காரியங்களை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். எழுத்து தொடர்பான பணிகளில் கற்பனைத்திறன் அதிகரிக்கும். கவலை குறையும் நாள்.

மகரம்

வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். உத்தியோக பணிகளில் இருப்பவர்களுக்கு வரவு மேம்படும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் உண்டாகும். வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெருமை நிறைந்த நாள்.

கும்பம்

சகோதரர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். அரசு தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். செய்கின்ற முயற்சிகளில் முன்னேற்றமான பலன்கள் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

மீனம்

உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். இறை வழிபாடு செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். எதிர்பாராத தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார பணிகளில் வாடிக்கையாளர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் மேம்படும். விவேகம் வேண்டிய நாள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

04.05.2022 Rasipalankal


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->