குட்கா மெல்லுகிறாயா என கேட்டு மணமகனை அறைந்த மணமகள்....!! - Seithipunal
Seithipunal


திருமண மேடைகளில் மணமகள் செய்த ஒரு காரியம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்நிய திருமணங்களில் பெரும்பாலும் மணமகள் அடக்கமா அமர்ந்திருக்க வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது. கோபமான சுபாவம் கொண்ட பெண் கூட மணமேடையில் அமைதியா அமர்ந்திருப்பார்.

இப்படி இருக்கையில், வட மாநிலத்தில் மணமகள் ஒருவர் மணமகனை அறையும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. திருமணம் மேடையில் சடங்குகள் செய்து கொண்டிருக்கும் போது உறவினர் ஒருவர் குட்கா மென்று கொண்டிருந்தார். அப்போது கோபமடைந்த மணமகள் அந்த உறவினரை கன்னத்தில் அறைந்துள்ளார்.

உடனே அந்த உறவினர் நான் மட்டுமில்லை உன் கணவனும் தான் குட்கா மெல்லுகிறான் என சொன்னது தான் தாமதம் உடனே அந்த மணமகள் மணமகனுக்கும் பளார் என ஒரு அறை குடுத்தார். இதனால் மணமகன் சோகமடைந்தாலும் சுற்றி இருந்த உறவினர்களிடம் சிரிப்பலை எழுந்து.

மேலும் குட்காவை துப்பி வர மணமகள் கூறியதும் மற்றொரு அறை வாங்க வேண்டாம் என முடிவு செய்து உடனே அந்த குட்காவை துப்பினார். இந்த காட்சிகளை அங்கிருந்த ஒருவர் பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Viral video of the bride slapping the groom on the dais


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->