அல்லேக்காக காரில் தூக்கிய காதலன், பெண் செய்த காரியத்தால் பதறியடித்து ஓட்டம்.!
try to kidnapping girl in trippur
திருப்பூரை சேர்ந்த பெண் ஒருவர் கோவை மாவட்டம் கனியூர் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரை ரஞ்சித்குமார் (25) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அடிக்கடி மாணவியிடம் தன்னை காதலிக்க வற்புறுத்தி வந்துள்ளார்.
ஆனால், மாணவி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதனால் தனது நண்பர்களுடன் சேர்ந்து பலே திட்டம் ஒன்றை தீட்டிய மாணவன், மாணவியிடம் கடைசியாக ஒருமுறை கேட்டு பார்த்து விட்டு, மறுத்தால் கடத்தி விடுவது என திட்டம் போட்டுள்ளார்.
இதன்படி, சக்திபாஷா மற்றும் அப்துல் ரகுமான் என்ற தனது நண்பர்களுடன் சேர்ந்து மாணவி படிக்கும் கல்லூரி வளாகத்தில் அவருக்காக காரில் காத்து இருந்தனர். பின்னர் மாணவி வந்ததும், அவரை சந்தித்து, தன்னுடன் வருமாறு அழைத்து திருமணம் செய்து கொள்ளலாம் என அவர் அழைத்துள்ளார்.
இதனை கேட்டு ஆவேசமடைந்த மாணவி, அவரை திட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பு எத்தணிக்க, இதனை கண்டு ஆத்திரமடைந்த, ரஞ்சித் மாணவியை அவரது காரில் கட்டாயப்படுத்தி ஏற்ற முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி சத்தம் போட்டு கத்தவே அருகில் இருந்த அனைவரும் ஓடி வந்தனர்.
இதனை கண்ட ரஞ்சித்தும் அவரது நண்பர்களும் தப்பி ஓடியுள்ளார். பின்னர் மாணவி காவல்துறையிடம் புகார் அளிக்க அவர்கள் ரஞ்சித் மற்றும் அவரது நண்பர்ளை கைது செய்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கீழ் சிறையில் அடைத்துள்ளனர்.
English Summary
try to kidnapping girl in trippur